மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே போதமேடு என்னும் பகுதியில் இன்று காலை சுற்றுலா பயணிகளை ஏற்றிவந்த ஜீப் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.


இதில் ஜீப்பில் பயணித்த சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பிரகாஷ் (50) உயிரிழந்தார், ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement