கிரிக்கெட் மைதானத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்
வடவள்ளி:
வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
வடவள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 27; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த, 10 மாதங்களுக்கு, முன்பு திருமணம் ஆனது. இவரது மனைவி சுருதி கர்ப்பிணியாக உள்ளார்.
ஹரிஹரன், வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம், வழக்கம் போல, வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் உள்ள மைதானத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார்.
விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஹரிஹரன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், ஹரிஹரனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ஹரிஹரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி