கஞ்சா விற்ற பட்டதாரி பெண் கைது
கோவை:
கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளம்பெண்ணை சோதனையிட்டனர். அவரிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சஜனா, 23 என்பதும், பட்டதாரியான இவர் கேரளாவில் இருந்து, கஞ்சா வாங்கி வந்து சமூக வலைதளங்கள் வாயிலாக, கல்லுாரி இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து, 1.750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!
-
அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement