திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவை:
திருப்பூர், பல்லடம் ரோடு, அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்,27; தொழிலாளியான இவர், பொள்ளாச்சி பகுதிக்கு வேலைக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த, 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார்.
அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக, 2023, ஜன., 31 ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர்போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு, 20 ஆண்டு சிறை, 16,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் காவலாளி மரணம்: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
-
போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!
-
அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
Advertisement
Advertisement