டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு
வானூர், : ஆரோவில் பகுதியில் 'டாக்சி' ஓட்டுநரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 30; டாக்சி ஓட்டுநர்.
நேற்று முன்தினம் இவர் 'ஓலா' மூலம் புக் செய்த பயணிகளை தனது டாக்சியில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டு, மீண்டும் வாகனத்தை எடுத்தார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர், மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.
இதில் காயமடைந்த மணிகண்டன், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
Advertisement
Advertisement