துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"

சிவகங்கை: துப்பாக்கியை காட்டி, என் வாயில் வைத்து சுட்டுவிடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:
விசாரித்தது போலீசாரின் அத்துமீறல். எப்.ஐ.ஆர்., இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள்? போலீசார், ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பட்டது.
11 கட்டளைகள்
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள 11 கட்டளைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம். அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
விழிப்புணர்வு
போலீஸ் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது. நான் இருந்தால் கூட இந்த போலீசாரின் போக்கு இப்படித்தான் இருக்கும். போலீசாருக்கு மனித உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அவசியம்.
மிரட்டினாங்க
நானும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன். என்னை போலீசார் மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்கள். துப்பாக்கியை காட்டி என் வாயில் வைத்து சுட்டு விடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள். இது காவல் துறையின் ஒரு பயிற்சி முறையாக இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (24)
theruvasagan - ,
02 ஜூலை,2025 - 22:33 Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
02 ஜூலை,2025 - 21:32 Report Abuse

0
0
Reply
Krishna Gurumoorthy - CHENNAI,இந்தியா
02 ஜூலை,2025 - 21:15 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 20:47 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 20:35 Report Abuse

0
0
Reply
எஸ் எஸ் - ,
02 ஜூலை,2025 - 19:44 Report Abuse

0
0
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 ஜூலை,2025 - 21:29Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 ஜூலை,2025 - 19:39 Report Abuse

0
0
Reply
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 19:17 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 18:57 Report Abuse

0
0
Reply
Raj S - North Carolina,இந்தியா
02 ஜூலை,2025 - 18:56 Report Abuse

0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
ஜிப்மரில் 557 புதிய பணியிடங்கள்... உருவாக்கம்; மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி
-
அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி டி.ஜி.பி.,க்கு கடிதம்
-
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்... பற்றாக்குறை; கிராமப்புற நோயாளிகள் கடும் அவதி
-
விக்கிரவாண்டி - தஞ்சை நெடுஞ்சாலையில் பயன்பாட்டிற்கு வந்தது 2வது சுங்கச்சாவடி
-
டூ - வீலர் மோதி எரிந்த பஸ்; உயிர் தப்பிய பயணியர்
-
சென்னையில் இயக்கிய 9 விமான சேவைகள் திடீரென நிறுத்தியது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'
Advertisement
Advertisement