நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை

டாக்கா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அவரை நாடு கடத்தும்படி முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக கடந்த ஏப்., 30ம் தேதி அரசு வழக்கறிஞர் சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்கு என அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பினை முகமது கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா பதவி விலகி 11 மாதங்கள் முடிந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுவாகும்.
வாசகர் கருத்து (4)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02 ஜூலை,2025 - 23:43 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
02 ஜூலை,2025 - 17:14 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
02 ஜூலை,2025 - 17:57Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கஞ்சா செடியின் விதைகள், இலைகள் வைத்திருப்பது குற்றமல்ல: கோர்ட்
-
எங்களுக்கே ஆயுதங்கள் இல்லை உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா
-
'அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்' வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி
-
ரூ.5 கோடி ஊழலில் அலட்சியம்: பழங்குடியினர் நலத்துறை மீது புகார்
-
உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி
-
ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை
Advertisement
Advertisement