ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை

சியாங் மாய் : ஆசிய கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி 5-0 என ஈராக்கை வீழ்த்தியது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா (13-0), திமோர்-லெஸ்தே (4-0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் ஈராக்கை எதிர்கொண்டது.
இந்திய அணிக்கு 14வது நிமிடத்தில் சங்கிதா முதல் கோல் அடித்தார். அடுத்து மணிஷா (44) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 2-0 என முந்தியது. இரண்டாவது பாதியில் கார்த்திகா (48), நிர்மலா தேவி (64), ரத்தன்பாலா தேவி (80) தலா ஒரு கோல் அடித்தனர்.
முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. 3 போட்டியில் 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை (6) வென்றால், 22 ஆண்டுக்குப் பின் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.
மேலும்
-
ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!
-
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!
-
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்
-
மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகை: வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்
-
புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்
-
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு