3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் பூசமணி,64; ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு தனது வீட்டில் குடும்பத்தோடு துாங்கினார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, அவரது வீட்டின் அறையில் மேஜை மீது வைத்திருந்த கைப்பையில் இருந்த, 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பையை மர்ம நபர்கள், அருகேவுள்ள ஜன்னல் வழியாக திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!
-
அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
-
போலீசாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு; முதல்வரை கடுமையாக சாடிய சீமான்!
-
தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளை போல் அழக்கூடாது: 'இண்டி' கூட்டணியை கிண்டல் செய்யும் ஓவைசி
-
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி
Advertisement
Advertisement