தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளை போல் அழக்கூடாது: 'இண்டி' கூட்டணியை கிண்டல் செய்யும் ஓவைசி

4

பாட்னா: பீஹாரில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக கூறியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைஸி, இதனை ஏற்காமல் தோற்ற பிறகு, குழந்தைகளை போல் 'இண்டி ' கூட்டணி கட்சிகள் அழக்கூடாது என தெரிவித்தார்.




பீஹாரில், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ஒவைஸி கூறியதாவது: அக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எங்கள் கட்சியின் மாநில தலைவர் முயற்சி செய்கிறார். முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்து சொல்லி உள்ளேன். ' எனது சாக்லேட்டை மற்றவர்கள் திருடிவிட்டார்கள்' என குழந்தை அழுவதை போல், தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் அழக்கூடாது.


அவர்கள் தயாராக இருந்தால் நானும் தயாராக இருக்கிறேன். பீஹாரில் பாஜ., - ஐ.ஜ.த.,வும் மீண்டும் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஏற்கவில்லை என்றால், நான் தனித்து போட்டியிடுவேன், ' என்றார்.


இதனிடையே, கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து ஆர்.ஜே.டி., கட்சி தலைவர் லாலுவுக்கு ஓவைஸி கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement