மனைவியை கொடுமைபடுத்திய கணவன் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் அப்துல்ரபீக் மனைவி ஷாகின்,32; இருவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணமான நிலையில் குழந்தை இல்லை. அப்துல் ரபீக் வேலைக்காக அடிக்கடி கத்தார் நாட்டிற்கு செல்வது வழக்கம்.
குழந்தை இல்லாததால் கணவன் அப்துல்ரபீக் மற்றும் குடும்பத்தினர், ஷாகினை கொடுமைபடுத்தினர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பணம் மற்றும் நகை கேட்டு ஷாகினை தாக்கி, வீட்டிலிருந்து வெளியே துரத்தியுள்ளனர். இது குறித்து மனைவி ஷாகின் அளித்த புகாரின் பேரில், கணவன் அப்துல்ரபீக் மற்றும் சிலர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
Advertisement
Advertisement