வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு

பெர்லின்: ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம். தற்போது பல்வேறு நாடுகளில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெயில் காரணமாக பிரான்சில் 1,700 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் முக்கிய சுற்றுலா தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் ஆட் பகுதியில் ஜூன் 30ல் ஏற்பட்ட காட்டுத்தீ 400 ஹெக்டர் அளவுக்கு பரவியது.

Advertisement