மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

ஊட்டி; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஹோப் பார்க்கை சேந்தவர் செந்தில்குமார், 50, அறிவியல் ஆசிரியர்.

கடந்தாண்டு ஜூனில்ஊட்டியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில்பணியில் சேர்ந்தார்.

பாலியல் கல்வி குறித்து அப்பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்பின்,பள்ளியின், 6ம் வகுப்பு மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், பள்ளியில் படித்த, 21 மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளித்தனர்.இதையடுத்து, ஊட்டி ரூரல் போலீசார் போக்சோ சட்டத்தில் செந்தில்குமரை கைது செய்தனர்.

Advertisement