தண்டவாளத்தில் மண் சரிவு; ரயில்கள் தாமதமாக இயக்கம்
அரியலுார்; அரியலுார் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
அரியலுார் அடுத்த வெள்ளூர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணியளவில், சுரங்கப்பாதைக்காக வெட்டி எடுக்கப்பட்ட மண், மீண்டும் அதே பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள், அந்த நேரத்தில் வந்த விழுப்புரம் - திருச்சி பயணியர் ரயிலை, வெள்ளூர் ரயில் நிலையத்திலும், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை செந்துறை ரயில் நிலையத்திலும் நிறுத்தி, பொக்லைன் இயந்திரம் கொண்டு, சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
மண் சரிந்து விழுந்த இடத்திலுள்ள தண்டவாளம் சேதமடைந்துள்ளதா என ஆய்வு செய்த பின், ஒரு மணி நேரம் தாமதமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு ரயில்களும் புறப்பட்டு சென்றன. இதனால், பயணியர் அவதியடைந்தனர்.
மேலும்
-
ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு