மீடியனில் மோதிய பைக்; இரு நண்பர்கள் உயிரிழப்பு
ஜோலார்பேட்டை; ஜோலார்பேட்டையில், மையத்தடுப்பில் பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
திருப்பத்துாரை சேர்ந்தவர் கவுரிசங்கர். ஜோலார்பேட்டை அடுத்த தாயப்பன் வட்டத்தை சேர்ந்தவர் பிரபு, 35. இருவரும் நண்பர்கள். ஜூன், 27 இரவு, 9:00 மணியளவில், ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்துார் நோக்கி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பல்சர் பைக்கில் சென்றனர்.
ஜோலார்பேட்டையில், சாலையிலிருந்த மையத்தடுப்பில் பைக் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று அதிகாலை இருவரும் உயிரிழந்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
Advertisement
Advertisement