கொள்ளையில் தொடர்பா? கமிஷனரிடம் பா.ஜ., புகார்!

மதுரை; 'மதுரையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி வீட்டில், பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தங்கள் கட்சி வக்கீல்களை தொடர்புப்படுத்தி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஸ்ரீனிவாசன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா புகார் அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியதாவது:
முன்னாள் அமைச்சரின் பல கோடி ரூபாய் கொள்ளை போனது குறித்து புகார் செய்யப்படாத நிலையில், இவ்விவகாரத்தில் இரு பா.ஜ., வக்கீல்களை தொடர்புபடுத்தியும், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இதற்காக தான் நடந்ததாகவும் வதந்தி பரப்புகின்றனர். பா.ஜ., கட்சியையும், நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தி சில சேனல்கள் களங்கம் ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.
மதுரையில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் வேகமும், வீச்சும் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
-
1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
-
பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?