பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை
தென்காசி; சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, ஆயுதப்படை போலீஸ்காரரிடம் விசாரணை நடக்கிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழ அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார், 30; இவர், தென்காசி மாவட்ட ஆயுதப்படையில், காவலராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததை மறைந்திருந்து பார்த்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணை பார்த்து அவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கணவரிடம் கூறியுள்ளார். அவர் மனோஜ்குமாரை கண்டிக்கவே, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
குருவிகுளம் போலீசார், மனோஜ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
Advertisement
Advertisement