அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பாக5 லட்சம் ரூபாய் வழங்கினார்.
பின் அவர் கூறியதாவது:
அஜித்குமார் மரண பிரச்னையை பா.ஜ., தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு உதவியாக இடம் வழங்கி உள்ளனர். அது, அவர்கள் வீட்டில் இருந்து 7 கி.மீ., தூரம் தள்ளி அமைந்துள்ளது. ஆக, கண் துடைப்புக்காக உதவி செய்துள்ளனர். இந்தத் தவறையும் மன்னிக்க முடியாது.
மனிதாபிமானமற்ற முறையில் தினந்தோறும் போலீசாரால் அரங்கேற்றப்படும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, பொதுமக்கள் விரைவில் நீதி வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
-
பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு
-
10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement