கேரளாவில் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு

திருவனந்தபுரம்: கேரளாவில் அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பிந்து,52, என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அலினா,11, அமல் பிரதீப்,20, ஜினு சாஜி, 38, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அரசு கட்டடம் இடிந்து பெண் உயிரிழந்தது கொலைக்கு சமம் என்று பா.ஜ.,வும், காங்கிரஸூம் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நிலவியது. இதனால், தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும்
-
உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆன்மிக ஒளியின் பிம்பம் தலாய் லாமா
-
இன்னும் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்; சொல்கிறார் 90 வயதான தலாய் லாமா!
-
நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது; ஜார்க்கண்டில் 4 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!
-
இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,