அ.பாளையம்-க.புதுார் இடையே பவானி ஆற்றில் பாலம் அமையுமா?
பவானி, அத்தாணி அருகே அம்மாபாளையம் பஞ்., அம்மாபாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடுபங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பவானி ஆற்றில் பரிசல் மூலமே பிற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அம்மாபாளையத்தில் இருந்து பவானி ஆற்றில் பரிசல் இயக்கப்படுகிறது.
நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்து, அக்கரையில் உள்ள கருல்வாடிப்புதுார் சென்று, அங்கிருந்து பஸ் அல்லது பிற வாகனம் மூலம் பயணத்தை தொடர வேண்டும். பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால், பரிசல் போக்குவரத்து தடைபட்டு விடும். அப்போது மேவாணி வழியாக, ௮ கி.மீ., துாரம் சென்று, கீழ்வாணி, மூங்கில்பட்டிக்கு சென்று பிற இடங்களுக்கு செல்கின்றனர். பவானி ஆற்றின் நடுவில் பாலம் கட்டினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement