லாலாப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

குளித்தலை,பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டை கொடுக்கால் தெரு, ஒற்றை பனைமரம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போது,

கொடிக்கால் தெரு பாலசுப்பிரமணியன், 28, பாஸ்கர், 26, செல்வக்குமார், 23, சிவா, 25, தீபன் குமார், 21, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து நபர்களை கைது செய்தனர்.

Advertisement