மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி
கரூர், கரூர் அருகே, கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.மாயனுார் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், 41, கட்டட தொழிலாளி. இவர், வெங்கமேட்டை சேர்ந்த செல்வராஜ், 30, என்பவருடன் சேர்ந்து கடந்த, 3ல், கரூர் செங்குந்தபுரத்தில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கட்டடத்தின் மாடி பகுதிக்கு, இரும்பு கம்பிகளை இரண்டு பேரும் துாக்கி சென்ற போது, மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கியது. அதில், படுகாயம் அடைந்த வெற்றிவேல், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். செல்வராஜ் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement