குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்நீர் குன்றம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் பிரச்னையை கடந்த ஓராண்டராக தீர்க்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், பெருநகர் - தேநீர்குன்றம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், '3 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் பிடித்து வருவதால், தினமும் சிரமமாக உள்ளது. சிப்காட் பணிக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிராமத்தில் மின்விளக்குகள், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் சரிவர நடக்கவில்லை' என்றனர். செய்யாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement