மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
வந்தவாசி, வந்தவாசி அருகே, வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அதியனுாரை சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு, 48.
இவரது விவசாய நிலத்தில் இருந்த நெற்பயிரை, எலி மற்றும் காட்டுப்பன்றி நாசம் செய்து வந்ததால், இதை தடுக்க, வயலில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குப்பன், 43, நேற்று அதிகாலை சாமிகண்ணு நிலத்தின் வழியாக சென்றபோது, மின்வேலியில் சிக்கியதில் பலியானார். கீழ்கொடுங்காலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement