நினைவு ஸ்துாபியில் விவசாயிகள் மலர் அஞ்சலி

பல்லடம் : கடந்த, 1972ல், விவசாய மின் கட்டணத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாய போராளிகள், 'சுப்பையன், முத்துக்குமாரசாமி ஆகியோரின் நினைவு ஸ்துாபி, பல்லடம் அடுத்த, கே. அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ளது. நேற்று, 53வது ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
l கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாநில செயல் தலைவர் வெற்றி தலைமையில், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், நகரத் தலைவர் தங்கவேல் உட்பட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
l உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில், மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட தலைவர்கள் மகுடேஸ்வரன், தமிழரசன், செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
l தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலத் துணைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
l தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோஷங்கள் எழுப்பியபடி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!