ஆசிரியர் பணியிடத்துக்கு அழைப்பு

திண்டுக்கல்: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ, தபால் மூலமோ ஜூலை 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement