கணவர் மாயம் மனைவி புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 35,

இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். வீடு திரும்ப வரவில்லை. அவரது அலைபேசியும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மனைவி பிரியா ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement