மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவங்கியது.

உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் மஹாசக்தி மாதிரியம்மன் கோவில் உள்ளது.

இந்தாண்டிற்கான மகோத்சவ விழா, நேற்று, காலை 6:30 மணிக்கு, மஹா கணபதி பூஜையுடன் துவங்கியது.

பின், காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, இன்று, காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் விரதமிருந்து சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்க உள்ளது.

இதையடுத்து, நாளை, பிற்பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கலும் வைக்கப்பட உள்ளது. இறுதியாக, இரவு 10:00 அம்மன் வீதியுலா நடக்க உள்ளது.

Advertisement