வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
கொடுங்கையூர்:கொடுங்கையூரில், வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமாகின.
கொடுங்கையூர், திருவள்ளூர் நகர் 7வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேகர், 47. இவரது மனைவி ஜெயந்தி, 45. தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
தம்பதி மீஞ்சூரில் 'காபி ஷாப்' நடத்தி வருகின்றனர். கடைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி ஜன்னல் அருகே சாவியை வைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஜெயந்தி திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று பீரோவில் இருந்த, இவரது 2 சவரன் தங்க வளையல், 10 சவரன் செயின் உள்ளிட்ட 12 சவரன் நகைகளை பார்த்தபோது, அவை திருட்டுபோனது தெரிய வந்தது.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
Advertisement
Advertisement