சிங்கம்புணரியில் மக்கள் தொடர்பு முகாம்  

சிவகங்கை : சிங்கம்புணரி அருகே குளத்துப்பட்டியில் ஜூலை 9 ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

அன்று காலை 10:00 மணிக்கு வாராப்பூர் அருகே குளத்துப்பட்டி சமுதாயக்கூடத்தில் நடக்கும் முகாமில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

அனைத்து துறை சார்ந்த திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்று, பயனாளிகளை பயன்பெற செய்வதே நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Advertisement