சூதாட்டம்: 5 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், செம்படா
பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக சசிராகுல், 35, முருகானந்தம், 55, சக்திவேல், 76, பிரசாத், 27, பொன்னுசாமி, 46, உள்பட, ஐந்து பேரை போலீசார் கைது
செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து, 14,160 ரூபாயையும், வேலாயுதம்-பாளையம் போலீசார் பறிமுதல்
செய்தனர்.

Advertisement