பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு


ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், கலைவாணர் வீதியை சேர்ந்தவர் சீனி-வாசன், 30; இவர் மனைவி திவ்யா, 28; எட்டு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நண்பர் வைத்தீஸ்வர-னுக்கு, ௧.௬௦ லட்சம் ரூபாயை கடன் கொடுத்துள்ளார்.


பணத்தை பலமுறை திரும்ப கேட்டும் தரவில்லை. இதில் மன-முடைந்த சீனிவாசன் கடந்த, 4ல் ஈரோடு பிருந்தா வீதியில் உள்ள வைத்தீஸ்வரன் வீட்டு முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்-துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement