சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய், இரண்டாவதாக, பீஹாரை சேர்ந்த அபய் குமார், 40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் பாலியல் அத்-துமீறலில் ஈடுபட்டார்.


சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், நான்கு மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அபய்-குமார் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்தனர். உடனே பீஹா-ருக்கு தப்பி சென்று தலைமறைவானார். கடந்த ஆறு மாதமாக சிக்காமல் இருந்த அவர், நேற்று திருப்பூர் வந்த போது, போலீசார் கைது செய்தனர்

Advertisement