7 பவுன் நகை திருட்டு

சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த கோட்டமாளம் மந்தை காட்சை சேர்ந்த தம்-பதி நாகராஜ்-லதா. லதா திருப்பூரில் தம்பி வீட்டில் தங்கி கார்-மெண்ட்சில் வேலை செய்கிறார். கணவர் நாகராஜ் கர்நாடக மாநி-லத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.

அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடைசியாக கடந்த ஜூன், ௧௯ல் ஊருக்கு வந்து சென்றார். கடந்த, 4ம் தேதி நாகராஜ்-லதா தம்பதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி லதா சென்றார். பீரோவில் வைத்திருந்த ஏழு பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கடம்பூர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.

Advertisement