நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, :தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். இணை செயலர் நவமணிகண்டன் முன்னிலை வகித்தார்.

வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மூன்றாண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், கோட்ட தலைவர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement