கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்
சென்னை: மெரினாவில், கத்திமுனையில் டிபன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 36. இவர், மெரினா அணுகுசாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, அவரது கடைக்கு எதிரே உள்ள 'கூல்பார்' கடையில் பணிபுரியும் வினோத், 25, என்பவர், ராஜாவிடம் கத்திமுனையில் 500 ரூபாய் பறித்து தப்பினார்.
இது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத்தை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, நான்கு மொபைல் போன்கள், ஒரு கத்தி, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் மீது, ஏற்கனவே மொபைல் போன் திருட்டு வழக்கு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை:கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
-
அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
Advertisement
Advertisement