இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
கரூர், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை, 2 முதல், 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2025 ஜூன், 30 நிலவரப்படி காலி பணியிடங்களை கல்வி மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் தலைமையில், மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 32 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 18 பேர் கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். அவர்கள் யாரும் இடமாறுதல் பெறவில்லை. விண்ணப்பித்தவர்களில், 14 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
மேலும்
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
-
டில்லியில் நவம்பர் 1 முதல் பழைய வாகனத்திற்கு மீண்டும் தடை
-
விமானத்தை மொய்த்த தேனீக்கள்