பல்லாங்குழியாக மாறிய சாலை ஆற்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஆற்பாக்கம்:ஆற்பாக்கத்தில் பல்லாங்குழியாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல் அரவை ஆலை இயங்கி வருகிறது. இங்கிருந்து ஜல்லி, எம்-.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், ஆற்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.
இதனால், சாலை வளைவில் திரும்பும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஆற்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
-
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
Advertisement
Advertisement