10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ம் தேதி குரு பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள செய்துள்ளது.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வருவோர் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை வடக்கு வாயில் (அம்மணி அம்மன் கோபுரம்) வழியாகவும் நேரடியாக அனுமதிக்கப்படுவர்.
மேலும், உடல் ஊனமுற்ற சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தர்களுக்கு, காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும் மேற்கு வாசல் (பேய் கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு
-
அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்
-
போலீசார் தாக்குதல் மா.கம்யூ., கண்டனம்
-
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று பவுர்ணமி பூஜை
-
இன்று குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
-
தலைமை செயலர் பற்றி அவதுாறு பா.ஜ., ரவிகுமாருக்கு முன்ஜாமின்
Advertisement
Advertisement