10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ம் தேதி குரு பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள செய்துள்ளது.

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வருவோர் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை வடக்கு வாயில் (அம்மணி அம்மன் கோபுரம்) வழியாகவும் நேரடியாக அனுமதிக்கப்படுவர்.

மேலும், உடல் ஊனமுற்ற சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தர்களுக்கு, காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும் மேற்கு வாசல் (பேய் கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement