காட்டுமாட்டுக்கு தொந்தரவு இருவர் மீது நடவடிக்கை

கொடைக்கானல்: - கொடைக்கானலில் ரோட்டில் சென்ற காட்டுமாட்டை அச்சுறுத்தி தொந்தரவு செய்த வாலிபர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்தனர்.

கொடைக்கானலை சேர்ந்த வாலிபர்கள் கார்த்தி 20, சூர்யா 20.இருவரும் நேற்று முன்தினம் இரவு பெர்னியல் ரோட்டில் சென்ற காட்டு மாடை ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் சென்று வீடியோ எடுத்து தொந்தரவு செய்தனர். வனத்துறையினர் இருவரையும் பிடித்து இணக்க கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வசூலித்தனர்.

Advertisement