ரூ.276 கோடி பாக்கி ரத்து செய்ய வேண்டும் கேட்கிறார் சபாநாயகர்

5

திருநெல்வேலி : கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது போல அரசு போக்குவரத்துக்கழகம் டோல்கேட்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம், தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.276 கோடி டோல்கேட்டுக்கு பாக்கி வைத்திருப்பதால் பஸ்களை அனுமதிக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், என்ன சூழலில் ஐகோர்ட் அவ்வாறு உத்தரவிட்டது என தெரியவில்லை. தமிழகத்தில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. பெண்கள் கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக்கழகம் லாப நோக்கமின்றி செயல்படுகிறது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே அதை போல போக்குவரத்து கழகத்தின் நிலுவையை தள்ளுபடி செய்ய வேண்டும். இருப்பினும் தமிழக முதல்வர், முறையாக நடவடிக்கை எடுப்பார், என்றார்.

Advertisement