ஆடு திருடியவர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 37; ஆடு மேய்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு பிரபு தனது வீட்டில் பின்புறமுள்ள பட்டியில் தனது 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது 2 ஆடுகளைக் காணவில்லை.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிய கூனிச்சம்பட்டு அடுத்த கே.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் மோனிஸ்வரன், 19; என்பவரை கைது செய்தனர்.

Advertisement