ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: தடுக்க நடவடிக்கை தேவை
கரூர்: அமராவதி ஆற்றில் பிளஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் துவங்கி, கரூர் மாவட்டம் திருமுக்கூட-லுாரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. கரூர் மாந-கரில் அமராவதி ஆறு ஆண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழி-யாக திருமுக்கூடலுார் நோக்கி செல்கிறது. கரூர் மாநகரின் வழி-யாக அமராவதி ஆறு பயணிக்கும் நிலையில், மாநகராட்சியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, ஆற்றின் தன்மையும் வெகுவாக பாதிப்ப-டைந்து வருகிறது. இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்-டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என
அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.