50 விளக்குகள் 'அவுட்'டால் தொடரும் விபத்து



மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப்பில் இருந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள மேம்-பாலத்தின் இருபுறமும், 50 கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் அனைத்து விளக்குகளும் பழுதாகி, ஓராண்டா-கவே எரியவில்லை.


இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காய-மடைகின்றனர். வேலைக்கு சென்று திரும்-புவோர், வழிப்பறி அச்சத்தில் நடந்து செல்கின்-றனர். அதனால் மின்விளக்குகளை எரிய வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement