சாலையோரத்தில் வளர்ந்து உள்ள முட்செடிகள்

செய்யூர் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் இருந்து சீக்கனாங்குப்பம் கிராமத்திற்குச் செல்லும் 2 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையோரத்தில் முட்செடிகள் வளர்ந்து உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப.சபரி, செய்யூர்.

Advertisement