போக்குவரத்திற்கு லாயக்கற்ற சேக்காடு இணைப்பு சாலை


ஆவடி, பட்டாபிராம் மக்கள், போக்குவரத்து நெரிசலின்றி, ஆவடி காமராஜர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வர, சேக்காடு இணைப்பு சாலை பிரதானமாக உள்ளது.

இரண்டு கி.மீ., துாரம் உடைய இந்த சாலையில், இரு மாதங்களுக்கு முன் குடிநீர் வாரியம் சார்பில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின், சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement