உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் லாரி மோதி விபத்து

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் கட்டுபாட்டை இழந்த லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 40; டிரைவர். இவர், குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சுங்க கட்டணம் வசூலிக்கும் இடத்தில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி, முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி டிரைவர் குமார் காயமடைந்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement