வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி : வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஜூன் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பின்பு, சக்தி பிறப்பு, கருடாழ்வார் சரித்தம், மாரியம்மன் பிறப்பு, காப்பு கட்டுதல், ஆரியமாலா காத்தவராயன் பிறப்பு, திருக்கல்யாண வைபவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கபிரதக்ஷனம், அலகு போடுதல், அக்னி சட்டி ஊர்வலம், காளி கோட்டை இடித்தல் வைபவம் நடந்தது.
பகல் 2:00 மணிக்கு மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். தேரோடும் வீதி வழியாக வடம் பிடித்த இழுத்து சென்றனர்.
இதில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை