பயன்பாட்டிற்கு வந்த சுகாதார மையம்



போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, பழைய போச்சம்பள்ளியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில், 15வது நிதிக்குழு மான்யத்தில், 2023 - -24-ல், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டப்பட்டது.


இதை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பர்கூர், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., மதியழகன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அக்கட்டடம் சம்மந்தப்பட்ட சுகாதார துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளதால், திறப்பு விழா கண்டும் பயன்படுத்த முடியாமல் இக்கட்டடம் வெறுமனே காட்சி அளிக்கிறது என, நேற்று நம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி, படம் வெளியானது. இந்நிலையில் நேற்றே, சுகாதார நிலைய கட்டடத்தில், சுகாதார பணியாளர்கள், பால் காய்ச்சி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

Advertisement