குண்டும், குழியுமான சாலை பாப்பகாப்பட்டி மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி பஞ்., பாப்பகாப்பட்டி நெடுஞ்சாலை பிரிவு சாலை பகுதியிலிருந்து கோடங்கிப்பட்டி, இரும்பூதிப்பட்டி இணைப்பு கிராம சாலை தார்ச்சாலையாக உள்ளது.
இந்த சாலையில், பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், இரவில் வாகனங்களில் செல்லும்போது தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளது.
எனவே, பாப்பகாப்பட்டி பிரிவு சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement